படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளுக்கு தடை கோரும் ஜெ.தீபா வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கங்கனா ரனாவத் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கும் தலைவி படத்துக்கும், கவுதம் வாசு தேவன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தமிழ் தொடருக்கும் தடை விதிக்கக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கின் மேல்முறையீட்டில் தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் எந்த உரிமையும் இல்லாமல் உள்நோக்கத்துடன் தீபா தாக்கல் செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பையா, பொண்ணைய பணம் வரும் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கவுதம் மேனனின் குயின் இணையதளத்தில் வெளியாகி விட்டதால். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க தீபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது கொரொனா பொது முடக்கத்தால் சினிமா படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தலைவி படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.