அண்ணா பல்கலை. மாணவியை மிரட்டிய காதலன் கைது
முன்னாள் காதலனின் நடவடிக்கை சரியில்லாததால் காதலை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் துண்டித்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி மாணவியை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறை முன்னாள் காதலன் ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறது.





