சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிணவறையில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..!
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அன்புரோஸ் என்பவர் ஊழியர்கள் தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மது போதைக்கு அடிமையான அன்பு ரோஸ் குடும்ப பிரச்சினை காரணமாக போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





