மும்பை மாநகராட்சிக்கு அக்சய் குமார் அளித்துள்ள ரூ.3 கோடி நன்கொடை!
கொரொனாவிற்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார துறையினருக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணம், முக கவசங்களை தயாரிக்க உதவும் வகையில் மும்பை மாநகராட்சி ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் 3 கோடி ரூபாய் நன்கொடை அளித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரொனா பணிக்கு பொதுமக்கள் பங்களிப்பு அளிக்கலாம் என பிரதமர் மோடி அண்மையில் கூறியிருந்தார். இதை ஏற்று பிரதமரின் நிவாரண நிதிக்கு அக்சய்குமார் 25 கோடி ரூபாயை அளித்திருந்தார். இந்நிலையில் மும்பை மாநகராட்சிக்கு தற்போது அவர் 3 கோடி ரூபாய் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







