திருமணமான ஒரே மாதத்தில் ஏர் இந்தியா நிறுவன பெண் தற்கொலை..!
சென்னையில் திருமணமான 32 நாட்களில் ஏர் இந்தியா நிறுவன பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கிண்டி ஆர்டிஓ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா குடியிருப்பில் வசித்து வரும் அன்பரசி என்ற அந்தப் பெண்ணுக்கு கப்பல் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் சரத்குமார் என்பவருடன் கடந்த மாதம் 13ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
நேற்று சரண்குமார் சாப்பிட உணவு வாங்க கடைக்கு சென்றுவிட்டு திரும்புவதற்குள்ளாக அன்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.







