நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல்..!
சென்னை சூளைமேடு பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விரட்டியதாக நடிகர் மன்சூரலிகான் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சூளைமேடு பெரியார் பாதை பகுதியில் நடிகர் மன்சூரலிகானுக்கு சொந்தமான வீடு இருந்தது.
அந்த வீட்டின் ஒரு பகுதியை 2,500 சதுர அடி அளவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.






