கிணற்றுக்குள் தனியாக சிக்கிக் கொண்ட நபர்..!
தென்காசி மாவட்ட ஆலங்குளம் அருகே கிணற்றுக்குள் தத்தளித்த நபரை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 65 ஆழ அடியில் இறங்கி மின் மோட்டாரை பழுது பார்த்தபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
கிணற்றின் உள்ளே இறங்கியவர் படிகள் இல்லாததால் மேலே வர முடியாமல் தவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.





