சேமித்து வைத்திருந்த பணத்தை காவலர்களின் நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..!
திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமி ஒருவர் தான் சைக்கிள் வாங்கி சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை காவலர்களின் நிவாரண நிதிக்காக வழங்கினார்.
உளுந்தை பகுதியை சேர்ந்த ரகுநாதன் என்பவரின் 7 வயது மகள் பூஜிதா சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் ஆயிரத்து 121 ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். அதனை காவலர்களின் நிவாரண நிதிக்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் பெற்றோருடன் சென்று வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சிறுமியை பாராட்டினார்.







