சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 24 வயது இளைஞர் கைது..!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்காலில் உள்ள அன்பு நகர் பகுதியில் 13 வயது சிறுமி எதிர் வீட்டில் உள்ள உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மைக்கேல் என்பவர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து உயிருடன் உள்ள நண்டை விட்டு பயமுறுத்தி பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
சிறுமி சத்தம் போட்ட நிலையில் அங்கு வந்த உறவினர்கள் மைக்கேலை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.





