தந்தை சமைக்கவில்லை என திட்டியதால் சிறுமி தற்கொலை ..!
கோவையில் தந்தை சமைக்கவில்லை என திட்டியதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மயிலம் பட்டியில் பீகாரை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அவருடைய மூத்த மகளான 16 வயது சிறுமி வீட்டில் சமையல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் சமையல் செய்யாமல் உறங்கிய மகளை தந்தை திட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தூக்கிட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






