கிணற்றில் விழுந்த பூனைக்காக தன் உயிரை பணயம் வைத்த முதியவர்..!
கேரளாவில் கிணற்றில் விழுந்த பூனையும் முதியவரையும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பராலி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் ஆசையாய் வளர்த்து வந்த பூனை 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
இதைப்பார்த்த முதியவர் பூனையை காப்பாற்ற கிணற்றில் கயிறு கட்டி இறங்கியுள்ளார். மீண்டும் மேலே வர முடியாமல் தவித்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த தீயணைப்புத்துறையினர் பூனையை பத்திரமாக மீட்டனர்.






