நடிகர் மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!
நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனுவை நிராகரித்துள்ளது. பெரும்பாவூர் நீதிமன்றம் மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லாலின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.






