மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற மே 3-வரை கெடு..!
மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் சிவசேனா அரசுக்கு ராஜ்தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் தொடர்ந்து மசூதிகளில் சப்தத்துடன் ஒலிபெருக்கிகளுக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மராட்டியத்தில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு மராட்டிய அரசுக்கு ராஜ்தாக்கரே கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் மசூதிகளில்மே 3-ஆம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.





