தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி..!
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். சேலம் மாவட்டத்தில் கூழையூரை சேர்ந்த மாணவன் தனுஷ் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாணவர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்உதயநிதி ஸ்டாலின் தனி விமானம் மூலம் சேலம் வந்து அங்கிருந்து கார் மூலம் மாணவனின் சொந்த ஊருக்கு வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.






