சதுப்பு நிலத்தில் தடுப்பு சுவர் கூடாது – அன்புமணி ராமதாஸ்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக் கூடாது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்யவும். சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக மக்களை திரட்டி பா.ம.க போராட்டம் நடத்தும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




