தமிழக வீரர் மாரியப்பனுடன் பிரதமர் மோடி உரையாடல்..!
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார். டோக்கியோவில் வரும் 24ம் தேதியுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். பெங்களூருவில் உள்ள மாரியப்பன் உடன் பேசிய பிரதமர் மோடி நடைபெற உள்ள போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
இதேபோல் சேலத்திலுள்ள மாரியப்பன், அம்மையார் சரோஜா, தம்பிகள் குமார் ஆகியோருடனும் மோடி பேசினார்.






