நீரஜ் சோப்ராவை வரவேற்க 30,000 பேருக்கு அறுசுவை விருந்து..!
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா தனது சொந்த ஊருக்கு திரும்ப உள்ள நிலையில் 30 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து அளிக்கப் போவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார் இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக அமைப்புகள் பல பாராட்டுகளையும் பரிசுகளையும் அள்ளித் தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான ஹரியானாவில் உள்ள நிலையில் அவரை வரவேற்கும் விதமாக 30 ஆயிரம் பேருக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட அறுசுவை விருந்து அளிக்கப் போவதாகவும் தனது தாய் சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.






