கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை அவசியம்..!
கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி கண்காணிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாவட்டத்தில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட இருப்பதாகவும் கூறினார்.






