சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்..!
சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அதிமுக தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்க போவதாக சசிகலா கூறியிருந்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கியமாக துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய விவாதம் நடைபெற்றது. சசிகலா அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடிய வருகிறார்.
கட்சியை வழி நடத்த இருப்பதாகவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அதிமுக தெரிவித்துள்ளது.






