--- --:--:-- --

தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக குறையும்..!

6

மிழகத்தில் இனி வரும் நாட்களில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசியதால் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.

 

இந்த நிலையில் காற்று வீசும் திசையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

 

இதில் நிலவும் சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon