130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ள ஃபேஸ்புக் நிறுவனம்..!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவறாக பரப்பப்படும் தகவல்களை சமாளிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
60க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்பட்டுவரும் முகநூலில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான போலி கணக்குகளை தடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டார். மேலும் தவறான பதிவுகள் பதிவிட்டால் தங்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.






