தாஜ்மகாலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்..!
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காதல் சின்னமான தாஜ்மஹால் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தாஜ்மஹால் வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது வெடிபொருட்கள் குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வெறும் புரளி என்று கூடுதல் காவல்துறை தலைவர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பின்னர் 11:15 மணிவாக்கில் சுற்றுலா பயணிகள் மீண்டும் தாஜ்மஹாலுக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் கூடுதல் சிஏஎஸ்எப் வீரர்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.






