முகக்கவசம் அணிய மறந்ததால் பதற்றத்தில் முககவசத்தை தேடிய அதிபர்..!
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிய மறந்ததால் பதற்றத்தில் முககவசத்தை தேடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
பெருந்தொற்று உலக நாடுகள் அனைத்திலும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடாளுமன்ற அவையில் முக கவசம் அணியாமல் இருந்துள்ளார்.
திடீரென முகக் கவசம் அணிவது குறித்து நினைவுக்கு வந்த அவர் பதறிப்போய் முக கவசத்தை வாங்கி அணியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






