ஆபத்தான முறையில் மலை உச்சியில் நின்று எடுக்கும் புகைப்படம் வைரல்..!
துருக்கியில் காதல் ஜோடி ஆபத்தான முறையில் மலை உச்சியில் நின்று இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் தரை பகுதிக்கும், குன்றுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி போட்டோகிராஃபர் நேர்த்தியால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மலை உச்சியில் நின்று பெண்ணின் கையை நபர் ஒருவர் பிடித்து தொங்கியவாறு நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் எடுக்கப்பட்டதா, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட தா என விவாதம் எழுந்த நிலையில் சிறிய அளவிலான குன்றை மலை போல் சித்தரித்து குன்றுக்கு கீழே இருக்கும் தரைப்பகுதி தெரியாதவாறு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.






