போகி பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவு..!
சென்னையில் போகி பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட காட்சி தரக் குறியீடு கடந்தாண்டை காட்டிலும் குறைந்திருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பெருநாளுக்கு முந்தைய நாளில் இருந்து சென்னையில் 15 மண்டலங்களிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2.6 பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. மேலும் ஆய்வின் படி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்னையின் காற்றின் தரம் குறைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.






