சாதிப்படி ஓட்டுப் போடாமல் சாதிப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள்..!
தமிழகத்தில் நீர் மேலாண்மை முறையாக நடக்காமல் பணம் வசூல் நடைபெறுவதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிறந்தநாளில் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது வறுமையை ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருவதாகவும் இதனை மாற்ற தான் போராடி வருவதாகவும் கூறினார். எனவே மாற்றம் வேண்டும் என்பதால் சாதிப்பவர்களை பார்த்து மக்கள் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.






