பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடி மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தனக்கு எதிரான இந்த வழக்கைத் ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், பெண்கள் மற்றும் சமயம் குறித்த சர்ச்சை கருத்துத் தொடர்பான இந்த வழக்கைத் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து, பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.





