17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா..!
லண்டனில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை முதியவரை ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக சிறு மன அழுத்தத்தில் இருந்ததால் அண்மையில் மனநல கவுன்சிலிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளார். அப்போது கடந்த 2014ஆம் ஆண்டு விடுமுறைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தாத்தா வீட்டிற்கு சிறுமி வந்தபோது அங்கிருந்த சின்ன தாத்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆன்லைன் மூலமாக இந்த புகாரை தொடர்ந்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் 68 வயது முதியவரை கைது செய்தனர்.






