தீபாவளி பண்டிகை காலத்தில் சீனாவுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..!
நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
அதேசமயம் சீனப் பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் சீனாவுக்கு 40,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கல்வான் தாக்குதலை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே ஏற்பட்டது. அதை பொதுமக்கள் தங்கள் வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து மகிழ்ந்தனர். இதன் தாக்கம் தீபாவளி காலத்தில் எதிரொலித்துள்ளது.`







