விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 4 வீரர்கள்..!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ட்ரூ ட்ராகன் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் நான்கு பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விண்வெளி வீரர்கள் மற்றும் ட்ரூ ட்ராகன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
27 மணி நேரத்தில் ட்ரூ ட்ராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும். விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள்.







