திரையரங்கு ஒன்றில் விற்கப்பட்ட பப்ஸில் இரும்புத்துண்டு..!
காஞ்சிபுரத்தில் திரையரங்கு ஒன்றில் விற்க்கப்பட்ட பப்ஸில் இரும்புத்துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மடம் தெருவில் இயங்கி வரும் திரையரங்கில் படம் பார்க்க வந்த நபர் ஒருவர் இடைவேளையின்போது பப்ஸ் வாங்கியுள்ளார்.
அதை உண்ணும் போது இரும்புத்துண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து திரையரங்க நிர்வாகத்திடம் முறையிட்டபோது பொறுப்பற்ற முறையில் பதில் அளித்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.






