பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட புதிய விமானம்..!
டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்தில் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சண்டிகரில் அவசரமாக தரையிறங்கியது. நேற்று காலை 11:30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை சந்தித்ததோடு அவரது இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்துள்ளது.
இதையடுத்து அவசர மருத்துவ உதவிக்காக அந்த விமானம் சண்டிகரில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சவுதி தலைநகர் ரியாத்தில் இருந்து பெங்களூர் வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பையில் அவசரமாக தரை இறங்கியது.






