17 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை நிகழ்த்திய இரு விமானப்படை வீரர்கள்..!
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு இருவிமானப்படை வீரர்கள் 17,982 அடி உயரத்திலிருந்து குதித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய விமானப் படையின் சி-130 ரக விமானத்தில் இருந்து வின் கமாண்டர் கஜானந்த் யாதவ் மற்றும் வாரண்ட் அதிகாரி ஏகே திவாரி ஆகிய வரும் இந்த சாதனையை படைத்தனர்.
வானில் 17 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டு உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில் பாராசூட் மூலம் அங்குள்ள கர்தூங்கலா பாஸ் என்ற இடத்தில் முடித்து தங்களது முந்தைய சாதனையை முறியடித்தார்.
மூவர்ண கொடியை ஏந்தியபடி இருவரும் பேராஷூட் மூலம் தரை இறங்கிய காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.







