திருவாடானையில் தாய் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற கல்வித் தொகை வழங்கு விழா..!
திருவாடானையில் தாய் பவுண்டேஷன் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு வாழ்நாள் முழுவதும் கல்வித் தொகை வழங்கு விழா நடைபெற்றது.
திருவாடானை அருகே அஞ்சு கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் தாய் பவுண்டேசன் சார்பில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் 13 மாணவ மாணவிகளுக்கு வாழ்நாள் முழுவதும் கல்வி உதவித்தொகை வழங்குவதாக தாய் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்து உதவி தொகைகளை வழங்கினார். மேலும் கல்வி கற்க ஆர்வம் உள்ள ஏழை எளிய மாணவிகள் மாணவர்கள் எப்பொழுதும் அவரை அணுகலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.






