--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

14

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

 

தொற்று பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 090 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,910 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon