ஃப்ரூட்ஸ் மார்க்கெட்டில் நிகழ்ந்த தீ விபத்து..!
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் காய்கறி மற்றும் பழ சந்தை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தலைநகரில் புதிய தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சந்தையில் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டுக்கடங்காத தீபிழம்புகள் தெறிக்க வானுலகு புகை மூட்டம் எழுந்தது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகப்படியான அனல் காரணமாக அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பயங்கர விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.







