--- --:--:-- --

அண்ணன் நினைவு நாளுக்கு சென்ற தம்பி ஓடஓட விரட்டி கொலை..!

11

மதுரையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அண்ணனின் நினைவு நாளுக்கு சொந்த ஊர் வந்தபோது ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். மேல அனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற அந்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ரவுடி சத்யா என்பவனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீஸார் கூறுகின்றனர்.

 

சிவகங்கை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் தனது அண்ணனின் நினைவு தினத்திற்காக நேற்று மாலை அங்கு வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மர்ம கும்பல் காலை ரயில்வே கேட் அருகே ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றுள்ளது. பழிவாங்கும் நோக்கில் கொலை அரங்கேறி இருக்கலாம் என்று கூறும் போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon