திருவாடானை அருகே விபத்தில் பெண் பலி!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். மனைவி சீதா (40). இவர் கருமொழியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்த போது எதிரே அதிவேமாக வந்த கார் மோதியதில் பலத்த காயம்பட்ட வரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தேவகோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சீதா மரணமடைந்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து திருவாடானை காவல் நிலையத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.







