மேலும் 5 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா!
கொரோனா ஊரடங்கை மேலும் ஐந்து வாரங்களுக்கு நீடிக்க அனுமதி அளிப்பதாக இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது. ஜெயராம் தாக்கூர் தலைமையிலான மாநில பாஜக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டு மாவட்டங்கள் ஊரடங்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை 214 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு அவர்கள் 63 பேர் குணமடைந்து விட்டனர் இறப்பு எண்ணிக்கை 5 ஆக பதிவாகியுள்ளது.






