செல்ஃபி மோகத்தில் தவறி 150 அடி உயரத்தில் தொங்கியவர்!
ரஷ்யாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மாடியிலிருந்து தவறி விழுந்தவரை போலீசார் காப்பாற்றினர். மாஸ்கோவின் புறநகர் பகுதியில் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அங்கு மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இந்தநிலையில் அண்ட்டோன் கோஸ்லோ என்ற இளைஞர் வீட்டின் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்ற போது பிடிமானம் நழுவியது.
150 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அவர் 15 நிமிடங்களுக்கு மேலாக அவரது அலறல் சத்தம் யார் காதிலும் விழவில்லை. இந்த நிலையில்தான் அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் இதனை பார்த்ததும் விரைந்து சென்று அந்த இளைஞரை காப்பாற்றினர்.







