--- --:--:-- --

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா

13

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தாய்லாந்து, இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.

 

மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விபரம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 16 பேருக்கு கொரொனா இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விவரங்களை சேகரித்து அடையாளம் காணும் பணியை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon