பெண்கள் கழிவறையில் நுழைந்து பாலியல் தொல்லை அளித்த பாஜக நிர்வாகி!
கோவையில் மருத்துவமனை சுகாதாரப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக பட்டியலின பிரிவின் பொறுப்பாளர் ஜோதி என்பவர் மருத்துவமனையில் பிளம்பர் ஆக பணியாற்றி வந்தார்.

அங்குள்ள பெண்கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் ஜோதி கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




