2 இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தன: மத்திய அரசு
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துக்கான அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில், 92,612 டன் எல்.பி.ஜி.யுடன், இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை இன்று மாலை கடந்துள்ளன.
அந்த கப்பல்களில் முறையே 27 மற்றும் 33 இந்திய பணியாளர்கள் உள்ளனர். அவை இரண்டும் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. வருகிற 26 மற்றும் 28 ஆகிய நாட்களுக்கு இடையே அவை துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.





