ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு
2025 ஆம் ஆண்டில் மட்டும் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட பயனர்களிடம் இருந்து சுமார் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களை கடந்து செல்வது ரயில்களில் படி மற்றும் மேற்கூரையில் பயணம் செய்வது, ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்வது, போலி டிக்கெட் ஏஜெண்ட் மீது நடவடிக்கை உட்பட மொத்தம் 50949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






