தான்சானியா நாட்டு கலவரத்தில் 700 பேர் உயிரிழப்பு..!
தான்சானியா நாட்டில் தேர்தலுக்கு பின்னர் நடந்த கலவரத்தில் 700 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறியும், முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
இதில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், வன்முறை பரவியதைத் தொடர்ந்து, அரசு இணையதள சேவையைத் துண்டித்தது. அந்நாட்டு அரசு தற்போது ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.





