வினாத்தாள் லீக்..பல்கலைத் தேர்வு ஒத்திவைப்பு..!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை., யின் கீழ் இயங்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ‘இண்டஸ்ட்ரியல் லா’ தேர்வு நடைபெறவிருந்தது.
ஆனால், முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததால், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






