கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சான்றிதழ்..!
கூடுதலாக 50 மாணவர்களைச் சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக இருக்க வேண்டும், இதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும், பெற்றோரை நேரில் சந்தித்து மாணவர்களை சேர்க்க அறிவுறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.






