நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்!
பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு லூதியானா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பல முறை கோர்ட் நோட்டீஸ் அனுப்பியும் சோனு சூட் ஆஜராகததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.





