மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல்
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், மகாராஷ்டிர தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்யும் எனக் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்த அந்த மாநில மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ள அவர், தேர்தல் வெற்றிக்காக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.






