சிறுமியை சீரழித்த காமுகனுக்கு சாகும் வரை சிறை தண்டனை..!
செய்யாறில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 59 வயதான கஜேந்திரன் என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.





